ஈரோடு: அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் வைக்க பாஜக கோரிக்கை

 

ஈரோடு: அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் வைக்க பாஜக கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் உருவ படத்தை வைக்க நடவடிக்கை கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாநில துணை தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் இன்று அக்கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பெரும்புதூரில் நடைபெற்ற பாஜக எஸ்.சி., எஸ்.டி., அணி செயற்குழு கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் முருகன் ஒப்புதலோடு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் உருவ படத்தை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது பாஜக நிர்வாகிகள் குணசேகரன், அய்யாசாமி, மயில்சாமி உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.