குமரி:அனைத்து மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு சாதகமான திருத்தங்களை கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டம்

 

குமரி:அனைத்து மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு சாதகமான திருத்தங்களை கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டம்

மாற்றியமைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட பி.எம்.எஸ் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நம்மிடம் பேசியபோது, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு பெற வரையறுக்கப்பட்டுள்ள சட்டங்கள் , தொழிலாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது.

குமரி:அனைத்து மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு சாதகமான திருத்தங்களை கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டம்

ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை புறந்தள்ளும் நோக்கத்தில் உள்ளது. மத்திய அரசு இயற்றியுள்ள சட்டங்களில் தொழிலாளர்களுக்கு சாதகமான விதி திருத்தங்கள் கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு சாதகமான திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என அவர்கள் கூறினர்.