திண்டுக்கல்: நூற்பாலையில் திடீர் தீ விபத்து -உயர்ரக பஞ்சுகள் எரிந்து நாசம்

 

திண்டுக்கல்:  நூற்பாலையில் திடீர் தீ விபத்து -உயர்ரக பஞ்சுகள் எரிந்து நாசம்

திண்டுக்கல் அருகே நூற்பாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்புள்ள உயர்ரக பஞ்சுகள் எரிந்து நாசம் ஆகியிருக்கிறது.திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அம்மன் நகர் பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பிரின்ஸ் நூற்பாலை இயங்கிவருகிறது. இந்த மில்லில் உள்ள குடோனில் திடீரென்று தீப்பிடித்தது.

திண்டுக்கல்:  நூற்பாலையில் திடீர் தீ விபத்து -உயர்ரக பஞ்சுகள் எரிந்து நாசம்

இதைப்பார்த்த ஊழியர்கள் உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் பஞ்சுகள் அடைக்கப்பட்டிருந்த குடோனை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரக பஞ்சுகள் எரிந்ததால் பல இலட்சம் ரூபாய் சேதம் ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.