திருப்பத்தூர்: பாதிரியார் ஸ்டேன் சுவாமியை விடுவிக்க கோரி ஆட்சியரிடம் மனு

 

திருப்பத்தூர்: பாதிரியார் ஸ்டேன் சுவாமியை விடுவிக்க கோரி ஆட்சியரிடம் மனு

ஜார்க்கண்ட் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமி கைதுசெய்யப்பட்டதை கண்டித்து, திருப்பத்தூரில் கண்டன நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்: பாதிரியார் ஸ்டேன் சுவாமியை விடுவிக்க கோரி ஆட்சியரிடம் மனு

தூய நெஞ்சக் கல்லூரியில் ஸ்டேன்சுவாமி விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாதிரியார் ஜான் அலெக்ஸாண்டர், கல்லூரி முதல்வர் மரிய அந்தோணிராஜ், எம்எல்ஏ நல்லதம்பி, மதிமுக, திராவிடர் கழகம், தமுமுக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்க, கலைஞர்கள் சங்கம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர்: பாதிரியார் ஸ்டேன் சுவாமியை விடுவிக்க கோரி ஆட்சியரிடம் மனு

இந்த கூட்டத்தில், பாதிரியார் ஸ்டோன் சுவாமி கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

திருப்பத்தூர்: பாதிரியார் ஸ்டேன் சுவாமியை விடுவிக்க கோரி ஆட்சியரிடம் மனு

தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் வழங்கப்பட்டது.