டார்ச்சர் தந்த டாக்டர்கள்! துப்பட்டாவில் தூக்கிட்டு நர்ஸ் தற்கொலை

 

டார்ச்சர் தந்த டாக்டர்கள்! துப்பட்டாவில் தூக்கிட்டு நர்ஸ் தற்கொலை

குஜராத் மாநிலம் சூரத்தில் மேகா ஆச்சார்யா(28) என்ற பெண் நர்ஸாக இருந்து வந்தார். மேகாவின் கணவர் வேலை நிமித்தமாக வெளி ஊரில் தங்கி இருந்த நிலையில், மேகா வீட்டில் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தபோது, மேகாவின் தற்கொலைக்கு காரணம் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்களும், சீனியர் செவிலியர்களும் என்பது தெரியவந்துள்ளது.

டார்ச்சர் தந்த டாக்டர்கள்! துப்பட்டாவில் தூக்கிட்டு நர்ஸ் தற்கொலை

இதையடுத்து மேகாவின் கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில், டாக்டர் அவினாஷ் துபேடன் தன்னுடன் தனிமையில் இருக்கச்சொல்லி அடிக்கடி வற்புறுத்தி வந்ததாகவும், சீனியர் செவிலியர்களும் அதற்கு உடன்பட வற்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கணவனும், மாமியாரும் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சிலரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றார்கள்.