தர்மபுரி: அருந்ததியர் சமூகத்தினர் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
Oct 27, 2020, 17:07 IST1603798642000
தர்மபுரியில் அருந்ததியர் சமூகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆட்டுக்காரன்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட அருந்ததியர் இன சமூகத்தினர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், உரிய பயனாளிகளிடம் வீட்டுமனைப் பட்டாவுக்கான இடங்களை ஒப்படைக்க கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் போராட்டக்குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று கோரிக்கை மனுவை வழங்கினர்.