கோவை: திமுகவினர் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

 

கோவை: திமுகவினர் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: திமுகவினர் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

கோவை: திமுகவினர் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

கோவை: திமுகவினர் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

மேலும், நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி அரசு தான் என்று கூறிய அவர், இதனால் வெறும் 8 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் மருத்துவராக முடியும் நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் ஆளுநரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.