ராமநாதபுரம்: மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படை – பரபரப்பு வீடியோ வெளியீடு

 

ராமநாதபுரம்: மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படை – பரபரப்பு வீடியோ வெளியீடு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தும் காட்சி சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது. வானிலை மைய எச்சரிக்கை காரணமாக 14 நாட்களுக்கு பிறகு, கடந்த 17ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது,
எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது
மீனவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.அதில், மீனவர்கள் படகை, இலங்கை கடற்படையின் அதிவேக படகு துரத்துவது போன்ற காட்சியும், பின்னர்,
கடற்படை வீரர்கள் படகு முன்னால் வந்து பாட்டிலை கொண்டு வீசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.