மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை… மன்மதன் ஆன பொறியியல் மாணவன்

 

மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை… மன்மதன் ஆன பொறியியல் மாணவன்

சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரையிலும் தன் வலையில் வீழ வைத்து வந்த மன்மதனான வலம் வந்த விருத்தாசலம் பொறியல் மாணவன் போலீசில் சிக்கியுள்ளான். மாணவியுடன் பலாத்காரம் செய்தபோது போலீசில் சிக்கியவன் போக்சோவில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நேற்று பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடப்பெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியரும் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.


ஹாலிங் பெல்லினை அடித்ததும் 9ம் வகுப்பு படிக்கும் மகள் பதற்றத்துடன் வந்து கதற திறந்திருக்கிறார். மகளின் பதற்றத்தை கண்டு அதிர்ச்சியுற்ற ஆசிரியை , என்ன நடந்தது சொல் என்று கேட்டதும், பதற்றத்தில் பதில் சொல்ல முடியாமல், பெட்ரூம் பக்கம் கை காட்டி இருக்கிறார்.

ஓடிப்போய் கதவை தள்ளினால் கதவு திறக்கவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்ததும் சந்தேகம் அடைந்த ஆசிரியை, உள்ளே யார் இருக்கா? என்று அதட்டிக்கேட்கவும், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒருவன் வலுக்கட்டாயமாக தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அழுதிருக்கிறார்.

மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை… மன்மதன் ஆன பொறியியல் மாணவன்


உடனே அக்கம்பக்கத்தினரிடம் விபரத்தை கூறி, போலீசுக்கும் தகவல் கொடுத்து அவர்களும் வந்த பின்னர், கதவை நெடுநேரம் தட்டியும் கதவு திறக்கப் படவில்லை. வேறு வழியின்றி கதவை உடைத்துக்குக்கொண்டு உள்ளே அறையிலும் இல்லை. பாத்ரூமுக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டது தெரிந்ததும், பாத்ரூம் கதவையும் உடைத்ததும் வெளியே வந்தான்.

போலீசாரின் விசாரணையில், விருத்தாசலம் அருகே பெரியவடவாடி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(20) என்பது தெரியவந்தது. மேலும், பொறியியல் மாணவனான ஜெயக்குமார் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலமாக மாணவிகள், குடும்ப பெண்களை வளைத்து, அவர்களிடம் நெருக்கமாக இருந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, பின்னர் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, அவற்றை காட்டி மிரட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் அப்பெண்களிடம் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை… மன்மதன் ஆன பொறியியல் மாணவன்


அப்படித்தான் இந்த 9ம் வகுப்பு மாணவியிடமும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தவன், ஆசை வார்த்தைகள் கூறி நேரி பார்க்க வேண்டும் என்று கூற, தனது ஆசிரியை என்பதால், ஆகஸ்ட்15ம் தேதி ஸ்கூல் சென்ற சமயம் வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். அங்கு வந்த சிவக்குமார், கட்டாயப்படுத்தி உறவு கொண்டதோடு அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வந்துள்ளான். அதனால்தான் வித்யாரம்பம் நாளில் அம்மா பள்ளிக்கு சென்றதும் சிவக்குமாரை வடவழைத்திருக்கிறார்.

ஆசிரியை சீக்கிரம் வந்ததால் சிவக்குமார் சிக்கிக்கொண்டான். மாணவி அந்த சிறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிவக்குமாரின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரைபலருடன் தனிமையில் இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன. இதையடுத்து ஜெயக்குமாரை ஆசிரியை கொடுத்தபுகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஜெயக்குமாருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சிலர் வந்து போலீசிடம் தகராறு செய்தனர். ஆனால், ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் ஜெயக்குமாரை விடுவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.