மதுரை: “ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றுகிறார்” – செல்லூர் ராஜூ

 

மதுரை: “ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றுகிறார்” – செல்லூர் ராஜூ

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மாவட்டம் கீழமாத்தூர் பகுதியில் ரூ.45.45 லட்சம் மதிப்பில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்ட பணிக்கு பூமிபூஜையை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், விவசாயி யார்?, விவசாயி போல் நடிப்பது யார்? என பொதுமக்களுக்கு நன்றாக தெரியும்என்று கூறிய அவர், கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேன் என ஏமாற்றுவார்,

மதுரை: “ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றுகிறார்” – செல்லூர் ராஜூ

அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார். மேலும், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் பெற்ற, பிறகே மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடத்துவோம் என அதிமுக தீர்மானித்துள்ளது.

இதுவே திமுகவாக இருந்தால் செய்யுமா? என கேள்வி எழுப்பினார். மேலும்
, கொரோனா பரவல் காரணமாகவே மருது சகோதரர்கள், தேவர் குருபூஜைக்கு வாகனங்களில் செல்வோருக்கு கட்டுப்பாடுகள் விதித்ததாகவும், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் கூறினார்.