“துணைக்கு வந்த பொண்ண தூக்கிட்டு போய்ட்டிங்களே.?” -கொரானா வார்டில் நடந்த கொடுமை

 

“துணைக்கு வந்த பொண்ண தூக்கிட்டு போய்ட்டிங்களே.?” -கொரானா வார்டில் நடந்த கொடுமை

கொரானா சிகிச்சைக்கு தாயோடு வந்த 16 வயது சிறுமி 18 வயதுக்கு மேற்பட்ட நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .

“துணைக்கு வந்த பொண்ண தூக்கிட்டு போய்ட்டிங்களே.?” -கொரானா வார்டில் நடந்த கொடுமை

கர்நாடகாவின் சிவமொகா நகரத்திற்கு அருகே மெக்கன் மருத்துவமனையில் ஒரு 16 வயது பெண்ணின் தாய் கடந்த 15 நாட்களாக கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையின் COVID-19 வார்டுக்கு அருகில் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பெண் தனது தாயைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு பணியாற்றும் இளைஞனுடன் நட்பு கொண்டார் .
சனிக்கிழமை மாலை, அந்த வாலிபர் அந்த சிறுமியை தன்னுடன் ஒரு காரில் இரவு உணவிற்கு கூப்பிட்டு சென்றார் .. அப்போது அந்த வாலிபர் , தனது மூன்று நண்பர்களுடன், அந்த பெண்ணை சிவமோகாவிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள அயனூருவுக்கு அழைத்துச் சென்றார். பிறகு அவர்கள் நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு ஒதுங்கிய இடத்தில் காரை நிறுத்தி விட்டு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், அவர்கள் அவரை மருத்துவமனையில் இறக்கிவிட்டு வெளியேறினர்.அதன் பின்னர் அந்த பெண் அங்கு சிகிச்சை பெரும் தன் தாயிடம் இந்த சம்பவத்தை கூறினார் .அதன் பிறகு அவர்கள் போலீசில் அவர்கள் மீது புகாரளித்தனர்
புகாரைப் பெற்ற பின்னர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து , இரண்டு குற்றவாளிகளை சில மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரையும் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

“துணைக்கு வந்த பொண்ண தூக்கிட்டு போய்ட்டிங்களே.?” -கொரானா வார்டில் நடந்த கொடுமை