“எங்களோடு வந்துடு ,சந்தோஷம் தந்துடு “என கேலி செய்த வாலிபர்களால் சுடப்பட்ட பெண்.

 

“எங்களோடு வந்துடு ,சந்தோஷம் தந்துடு “என கேலி செய்த வாலிபர்களால் சுடப்பட்ட பெண்.

தனியாக சென்ற ஒரு பெண்ணை கிண்டல் செய்த வாலிபர்களை, தட்டி கேட்ட பெண்ணை அந்த வாலிபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் .

“எங்களோடு வந்துடு ,சந்தோஷம் தந்துடு “என கேலி செய்த வாலிபர்களால் சுடப்பட்ட பெண்.

உ.பி.யின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு ப்ளஸ் டூ படிக்கும் ஒரு 16 வயது பெண் தனியாக சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் அந்த பெண்ணை கேலியும் கிண்டலும் செய்து ஆபாசமாக பேசியுள்ளனர் .அப்போது அந்த பெண் அவர்களை கண்டபடி திட்டியுள்ளார் .பிறகு அந்த பெண் அன்று இரவு வீட்டிற்கு வந்துவிட்டார் .

அன்று நள்ளிரவு அந்த வாலிபர் கூட்டம் மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து அவரின் வீட்டு வாசலில் நின்று அவரை கேலியும் கிண்டலும் செய்துள்ளனர் .பிறகு ஆபாசமாக பேசியுள்ளனர் .இதனால் அந்த பெண் வீட்டிற்கு வெளியே வந்து அந்த வாலிபர்களை கண்டபடி திட்டியுள்ளார் .அதனால் அந்த வாலிபர்கள் தங்களோடு கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை சுட்டு விட்டு ஓடி விட்டார்கள் .பிறகு துப்பாக்கி குண்டு உடலில் பாய்ந்து உயிருக்கு போராடிய அந்த பெண்ணை அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .,அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தார்கள் .பிறகு அந்த பெண்ணின் உடலினை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .
பிறகு போலீசார் அந்த பெண்ணை சுட்ட வாலிபர் கூட்டத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் .

“எங்களோடு வந்துடு ,சந்தோஷம் தந்துடு “என கேலி செய்த வாலிபர்களால் சுடப்பட்ட பெண்.