16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் கைது!

 

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் கைது!

வேதாரண்யம் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு உதவியாக அவரின் 16 வயது மகளும் பணிக்கு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் விஜயன், அரவிந்தன் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அரவிந்தன் மனைவி துர்காதேவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் கைது!

இந்நிலையில், இதுகுறித்து உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம் அவருடைய நண்பர்களான விஜயன், அரவிந்தன் அவர் மனைவி துர்கா தேவி ஆகியோர் மீது வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த வேதாரண்யம் காவல் நிலைய காவலர்கள் விஜயன், அரவிந்தன் அவரது மனைவி துர்காதேவி ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் கைது!
மேலும் முக்கிய குற்றவாளியான உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம் தலைமறைவு என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஹோட்டல் உரிமையாளர் சண்முக சுந்தரத்தின் சகோதரர் காவல் துறையில் (இளங்கோ -வேளாங்கண்ணி டிராபிக் இன்ஸ்பெக்டர்) புரிவதால், அவர் காவல்துறை செல்வாக்கை பயன்படுத்தி தனது சகோதரன் சண்முக சுந்தரத்தை கைது செய்யாமல் தலைமறைவு என கூறிவருகின்றனர் என்றும் உடனடியாக சண்முக சுந்தரத்தை கைது செய்ய வேண்டுமென கோரி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.