“அய்யய்யயோ இந்த செப்டிக் டேங்குல வந்து பாருங்களேன் “-எட்டி பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்

 

“அய்யய்யயோ இந்த செப்டிக் டேங்குல வந்து பாருங்களேன் “-எட்டி பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் ராஜ்கஞ்சில் உள்ள ஷியானாஷிகாதாவில் வசிக்கும் ஒரு 16 வயது பெண் ஆகஸ்டு 10ம் தேதி முதல் காணவில்லை. அவரை இரண்டு நாட்களாக காணாததால் அவரின் பெற்றோர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த காணாமல் போன அந்த பெண்ணை பற்றி அந்த ஊரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .

“அய்யய்யயோ இந்த செப்டிக் டேங்குல வந்து பாருங்களேன் “-எட்டி பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்


அப்போது கிடைத்த தகவல் அந்த ஊர் மக்களையே அதிர்ச்சியடைய செய்தது .
அந்த பெண் ஆகஸ்டு 10ம் தேதியன்று தன்னுடைய தோழியை பார்க்க மாலை நேரத்தில் அந்த பகுதியில் போய்க்கொண்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த ஓர் வாலிபர் அந்த பெண்ணிடம் ‘உன்னுடைய தோழி அந்த காரில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், உன்னை கூப்பிடுகிறார்’ என்று பொய் சொல்லி அந்த காரில் இழுத்து போட்டுகொண்டு ஒரு தனியான இடத்திற்கு கடத்தி சென்றார் .

பிறகு அங்கு ஏற்கனவே காத்திருந்த இன்னும் இரண்டு வாலிபர்களோடு சேர்ந்து கொண்டு மொத்தம் மூன்று பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு, பிறகு வெளியே தெரிந்து விட போகிறதென்று பயந்து அந்த பெண்ணை கொலை செய்துள்ளனர் .
பிறகு அந்த பெண்னின் உடலை அந்த ஊரிலுள்ள ஒரு செப்டிக் டேங்கில் போட்டுவிட்டு ஓடி விட்டனர் ,மறுநாள் ஆகஸ்டு 15ம் தேதியன்று அந்த செப்டிக் டேங்கிலிருந்து துர்நாற்றம் வருவதையறிந்த ஊர் மக்கள் போலிஸில் புகாரளித்ததும் ,ஓடி வந்த போலீஸ் அந்த பிரேதத்தை கைப்பற்றி விசாரித்ததில் அது காணாமல் போன 16 வயது பெண்ணின் உடல் என கண்டறிந்து,அவரை கெடுத்து கொன்றவர்களை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

“அய்யய்யயோ இந்த செப்டிக் டேங்குல வந்து பாருங்களேன் “-எட்டி பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்