“அர்த்த ராத்திரியிலே அதுக்குத்தான் கூப்பிடறேன்னு நெனச்சேன்” -காதலியின் பேச்சை நம்பி சென்ற காதலன் கதி

 

“அர்த்த ராத்திரியிலே அதுக்குத்தான் கூப்பிடறேன்னு நெனச்சேன்” -காதலியின் பேச்சை நம்பி சென்ற காதலன் கதி


வேறு சமூக பெண்ணை காதலித்த ஒரு டீனேஜ் சிறுவனை அவரின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது

“அர்த்த ராத்திரியிலே அதுக்குத்தான் கூப்பிடறேன்னு நெனச்சேன்” -காதலியின் பேச்சை நம்பி சென்ற காதலன் கதி

பீகாரின் பாட்னாவில் உள்ள பகதூர்பூர் பகுதியில் உள்ள நியூ அசிமாபாத் காலனியில் அன்சு குமார் என்ற 16 வயதான டீனேஜ் சிறுவன் ஒரு தனியார் நிறுவனத்தில் டெலிவரி பையனாக பணிபுரிந்தார். அவர் சந்தல்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தார்.
இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக ஊர் சுத்தி வந்துள்ளர்கள் .மேலும் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் காதலுக்கு பலத்த எதிர்ப்பும் இருந்துள்ளது .அதனால் ஒரு முறை அந்த காதலியின் சகோதரர் அந்த வாலிபரிடம் தன்னுடைய சகோதரியை காதலிப்பதை கை விடும்படியும்
இல்லையெனில் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று மிரட்டியுள்ளார் .
இந்நிலையில் ஒருநாள் அவரின் காதலியிடமிருந்து அழைப்பு வந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் வீட்டை விட்டு அவர் வெளியேறியதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால் மறுநாள் காலை 7 மணியளவில், அவரது உடல் சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக உள்ளூர்வாசிகள் கூறினார்கள் .
பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் அந்த டீனேஜ் வாலிபரை அந்த காதலியின் உறவினர்கள் அடித்து கொலை செய்து சடலத்தை சாலையில் வீசி விட்டு சென்றதை கண்டறிந்தார்கள் . பிறகு அந்த காதலியையும் அவரின் சகோதரரையும் பொலிஸார் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள் .

“அர்த்த ராத்திரியிலே அதுக்குத்தான் கூப்பிடறேன்னு நெனச்சேன்” -காதலியின் பேச்சை நம்பி சென்ற காதலன் கதி