“கஞ்சா அடித்து,கல்லால் அடித்து,உடலை எரித்து .. “-டீனேஜ் சிறுவர்களுக்குள் போதையில் நடந்த வெறி செயல்.

 

“கஞ்சா அடித்து,கல்லால் அடித்து,உடலை எரித்து .. “-டீனேஜ் சிறுவர்களுக்குள் போதையில் நடந்த வெறி செயல்.


கஞ்சா அடித்த மூன்று சிறுவர்களுக்குள் நடந்த மோதலில் இருவர் சேர்ந்து ஒருவரை கொன்றதால் போலீசார் அந்த இருவரையும் கைது செய்தார்கள் .

“கஞ்சா அடித்து,கல்லால் அடித்து,உடலை எரித்து .. “-டீனேஜ் சிறுவர்களுக்குள் போதையில் நடந்த வெறி செயல்.


உத்திரபிரதேச மாநிலம் மீரட் நகரின் புதனா கேட் பகுதியில் ,அஷ்ரப் பிலால் மற்றும் சாந்தனு ஆகிய 16 வயதான மூன்று டீனேஜ் சிறுவர்களும் நண்பர்களாக இருந்து வந்தார்கள் .அவர்கள் மூவருக்கும் கஞ்சா அடிக்கும் பழக்கம் இருந்துள்ளது .அதனால் அவர்கள் அடிக்கடி அங்குள்ள ஒரு தனிமையான பகுதியில் சந்தித்து கஞ்சா அடித்து விட்டு போதையில் கிடப்பார்கள் .
இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மூவரும் வழக்கம்போல கஞ்சா அடித்தார்கள் .அதன் பிறகு மூவருக்கும் போதை தலைக்கேறியது .அதன் பிறகு அந்த மூவரில் அஷ்ரப் என்ற வாலிபருடன் பிலால் மற்றும் சாந்தனு ஆகிய இருவருக்கும் மோதல் உருவானது .அந்தத் மோதலில் நடந்த கலவரத்தில் பிலால் மற்றும் சாந்தனு ஆகிய இருவரும் சேர்ந்து அஷ்ரப்பை கல்லால் அடித்து கொன்றனர் .அதன் பிறகு போதை தெளிந்து எழுந்து பார்த்த போது , தாங்கள் தன்னுடைய நண்பனை கொன்றதையறிந்து அவர்கள் திடுக்கிட்டார்கள் .அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து இறந்து கிடந்த அஷ்ரப்பின் உடலினை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள் .அதன் பிறகு அவர்கள் அவரின் நண்பரின் பாதி எரிந்த உடலை அங்கயே விட்டு சென்றுள்ளார்கள்.அதன் பிறகு அந்த பகுதியில் அந்த எரிந்த உடலினை நாய்கள் கவ்விக்கொண்டு சென்றதை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அஷ்ரபை அவரின் நண்பர்கள் பிலால் மற்றும் சாந்தனு ஆகியோர் போதையில் கொன்றதை கண்டறிந்தார்கள் .அதன் பிறகு அவர்களை போலீசார் கைது செய்தார்கள் .

“கஞ்சா அடித்து,கல்லால் அடித்து,உடலை எரித்து .. “-டீனேஜ் சிறுவர்களுக்குள் போதையில் நடந்த வெறி செயல்.