சிறுமி பாலியல் வன்கொடுமை; தாய், அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

 

சிறுமி பாலியல் வன்கொடுமை; தாய், அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

கோவை

கோவையில் 16 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனைவித்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடன் 16 வயதுடைய மகள் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு, சுப்பிரமணி என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் அவரது வீட்டிற்கு அடிக்கட்டி சென்று வரும் சுப்பிரமணி, 16 வயது சிறுமிக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது தாய்க்கு தெரிந்தபோதும், அவர் சுப்பிரமணியை கண்டிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை தொடர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சிறுமி, இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமி பாலியல் வன்கொடுமை; தாய், அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணி மற்றும் சிறுமியின் தாயாரை கைதுசெய்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிறுமியின் தாய் மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், பாலியல் சீண்டலை தடுக்காத சிறுமியின் தாய்க்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.