சென்னையில் இணை நோய் இல்லாமல் இதுவரை 16 பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

 

சென்னையில் இணை நோய் இல்லாமல் இதுவரை 16 பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல சென்னையில் 19 கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இணை நோய் இல்லாமல் இதுவரை 16 பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இணை நோய் ஏதும் இல்லாமலே இதுவரை 16 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மருத்துவமனையில் உயிரிழந்த 66 பேரில் இணைநோய்கள் இல்லாமல் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேருக்கு கொரோனா பாதிப்புடன் இணை நோய்கள் இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.