சென்னையில் ஒரே நாளில் 16 பேர் கொரோனாவால் மரணம்!

 

சென்னையில் ஒரே நாளில் 16 பேர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். இங்கு மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் எதிர்பார்க்க முடியாத அளவில் கொரோனா அதிவேகமாக பரவியது. நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளிக்க முடியாமல் சென்னை மாநகராட்சி திணறியது. இதனைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் கையாளப்பட்டன. அதாவது சென்னையில் ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டதோடு சென்னை மக்கள் வேறு எங்கும் செல்லாத வண்ணம் தடுக்கப்பட்டது. அதே போல பரிசோதனை அதிகபடுத்துதல், தெருக்கள் தோறும் பரிசோதனை என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் கையாளப்பட்டதால் தற்போது சென்னையில் பாதிப்பு பெருமளவு குறைந்திருக்கிறது.

சென்னையில் ஒரே நாளில் 16 பேர் கொரோனாவால் மரணம்!சென்னையில் ஒரே நாளில் 16 பேர் கொரோனாவால் மரணம்!

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர்.