“பையனுக்கு 16,பொண்ணுக்கு 17”-அடிக்கடி வீட்டுக்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவன் …

 

“பையனுக்கு 16,பொண்ணுக்கு 17”-அடிக்கடி வீட்டுக்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவன் …

பஞ்சாபில் உள்ள பாட்டியாலா பகுதியில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவனை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர் .
ராஜ்புராவின் பாட்டியாலா பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கும் அந்த 17 வயது பெண்ணின் குடும்பமும் ,அந்த 16 வயது சிறுவனின் குடும்பமும் குடும்ப நண்பர்கள் .இதன்காரணமாக அந்த பெண் தனது தாயுடன் அடிக்கடி அந்த பையனின் வீட்டுக்கு போவார் ,அந்த சமயத்தில் அந்த பையன் அந்த பெண்ணை மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் .மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .இதனால் பயந்து போன அந்த சிறுமி இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் அவர் கூப்பிடும்போதெல்லாம் அவரின் இச்சைக்கு பணிந்துள்ளார் .

“பையனுக்கு 16,பொண்ணுக்கு 17”-அடிக்கடி வீட்டுக்கு வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய சிறுவன் …
இந்நிலையில் ஒரு நாள் அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி வந்துள்ளது ,அவரின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது அவர் 23 வாரம் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது ,இதனால் அதிர்ச்சியுற்ற அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பையன் மீது போலீசில் புகார் தந்தனர் .போலீசார் அந்த பையன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .