16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்! குழந்தைத் திருமணம் என குடும்பத்தை பிரித்த போலீஸ்

 

16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்! குழந்தைத் திருமணம் என குடும்பத்தை பிரித்த போலீஸ்

படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்த  சிறுவன், சிலிண்டர் போடும் ஒரு வீட்டில் வேலை செய்யும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளான். அந்த பெண் வீட்டை விட்டு சிறுவனின் வீட்டிற்கு ஓடி வந்துள்ளது. ஊரில் தவறாக பேசுவார்கள் என்று சிறுவனின் பெற்றோர் இருவருக்கும்  திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு பின்பு குழந்தை திருமணம் தொடர்பாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் 16 வயது பையனின் பெற்றோரின் மீதும், 19 வயது மணப்பெண்ணின் மீதும் வழக்கு பதிவு நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்த  சிறுவன், சிலிண்டர் போடும் ஒரு வீட்டில் வேலை செய்யும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளான். அந்த பெண் வீட்டை விட்டு சிறுவனின் வீட்டிற்கு ஓடி வந்துள்ளது. ஊரில் தவறாக பேசுவார்கள் என்று சிறுவனின் பெற்றோர் இருவருக்கும்  திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தலாஷ் என்ற என்ஜிஓ-வைச் சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் இந்த குழந்தைத் திருமணம் குறித்து போஸிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரின் பிறந்த சான்றிதழை சோதித்த சிறுவனுக்கு 16 வயது எனவும் பெண்ணிற்கு 19 வயது எனவும் இருந்ததால் குழந்தைத் திருமணம் என முடிவு செய்தனர். பின்னர் அந்த பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.