16 காளை அடக்கிய காளையன் ரஞ்சித்துக்கு சாண்ட்ரோ கார் பரிசு! 

 

16 காளை அடக்கிய காளையன் ரஞ்சித்துக்கு சாண்ட்ரோ கார் பரிசு! 

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உற்சாக கொண்டாட்டத்துடன் களைக்கட்டியது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளின் திமில்களைப் பற்றி வீரர்களும் சூரத்தனம் காட்டினர். ஆனாலும் பல காளைகள் அவர்களை மிஞ்சி திமிறி ஓடின. இதில் மொத்தம் 739 காளைகளும், 695 மாடுபிடி  வீரர்களும் பங்கேற்றனர். 

ஜல்லிக்கட்டு
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 16 காளைகளை அடக்கில் ரஞ்சித் என்பவர் முதலிடம் பிடித்தார். அவருக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக முதல் பரிசு சாண்ட்ரோ கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ரஞ்சித்க்கு ரூ. 7 லட்சம் மதிப்புள்ள் 4 பசு மாடுகளும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 14 காளைகளை தழுவிய கார்த்திக் என்பவருக்கு 2 ஆவது பரிசாக இருசக்கர வாகனமும், 13 காளைகளை தழுவிய கணேசன் என்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டன. இதேபோல் முதல் பரிசை தட்டிச்சென்ற கருப்பன் என்ற காளைக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.