அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!

 

அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!

தியேட்டர்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்களை, வரும் 15ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அதில், தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு ஒருவர் அமர வேண்டும், 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம், அனைவரும் மாஸ்க் அணிந்த படியே படம் பார்க்க வேண்டும், படம் முடித்த பிறகு ஒவ்வொரு முறையும் தியேட்டர்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அக்.15 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி; வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!

அதே போல, பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை மட்டுமே தியேட்டர்களில் தர வேண்டும், திரையரங்குகளில் 24 முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வரை ஏசி அளவை கடைபிடிக்க வேண்டும், ஆன்லைன் டிக்கெட் முறையையே ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை தியேட்டரில் இடைவெளியின் போது ஒளிபரப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.