” பாலியல் தொல்லை கொடுத்தேன் “: திருநங்கை கொலை வழக்கில் பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்!

 

” பாலியல் தொல்லை கொடுத்தேன் “:  திருநங்கை கொலை வழக்கில் பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்!

கோவையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த வழக்கில் இளைஞர் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

” பாலியல் தொல்லை கொடுத்தேன் “:  திருநங்கை கொலை வழக்கில் பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்!

கோவை சாய்பாபா காலனியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா.இவர் திருநங்கைகள் நல்வாழ்விற்காக தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கினார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சங்கீதா உடலில் வெட்டு காயங்களுடன் தண்ணீர் ட்ரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய சாய்பாபா காலனி போலீசார் அவரது கொலை குறித்து விசாரணையை தொடங்கினர்.

” பாலியல் தொல்லை கொடுத்தேன் “:  திருநங்கை கொலை வழக்கில் பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்!

இந்நிலையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த வழக்கில் ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கீதாவின் டிரான்ஸ் கிச்சனில் பிரியாணி மாஸ்டராக வேலைபார்த்து வந்துள்ளார். திருநங்கை சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை அவர் போலீசில் கூற முயன்றதால் அவரை கொன்றதாகவும் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.