நாகை: வாய்த்தகராறில் மகனை உருட்டுக்கட்டையால் அடித்துகொன்ற தந்தை கைது

 

நாகை: வாய்த்தகராறில் மகனை உருட்டுக்கட்டையால் அடித்துகொன்ற தந்தை கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய் தகராறில் மகனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற தந்தையை போலீசார் கைதுசெய்தனர். வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகராஜன். இவரது மகன் முருகையன். இவரது மனைவி நாகவல்லி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

நாகை: வாய்த்தகராறில் மகனை உருட்டுக்கட்டையால் அடித்துகொன்ற தந்தை கைது

இந்நிலையில், அவர் உயிருடன் இருந்தபோது படுத்திருந்த இடத்தில் நாகராஜன் மோட்டார் எஞ்சினை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், நாகராஜுக்கும் – முருகையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் உருட்டுக் கட்டையால் முருகையனை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த முருகையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜனை கைதுசெய்தனர்.