நாகை: வாய்த்தகராறில் மகனை உருட்டுக்கட்டையால் அடித்துகொன்ற தந்தை கைது
Oct 26, 2020, 16:03 IST1603708409000
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய் தகராறில் மகனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற தந்தையை போலீசார் கைதுசெய்தனர். வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகராஜன். இவரது மகன் முருகையன். இவரது மனைவி நாகவல்லி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில், அவர் உயிருடன் இருந்தபோது படுத்திருந்த இடத்தில் நாகராஜன் மோட்டார் எஞ்சினை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், நாகராஜுக்கும் – முருகையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் உருட்டுக் கட்டையால் முருகையனை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த முருகையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜனை கைதுசெய்தனர்.