ஈரோடு: திருமாவளவனுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் – உருவ பொம்மை எரிப்பு
Oct 24, 2020, 19:18 IST1603547320000
பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கண்டித்து, ஈரோட்டில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டி நான்குரோட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, திருமாவளவனை கைதுசெய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, போராட்டக்காரர்களை போலீசார் கைதுசெய்ய முயன்றதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர். போராட்டத்தின் இடையே பாஜக தொண்டர் ஒருவர், திருமாவளவனின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.