கோவை: பட்டாசு கடை உரிமம் தர லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரி கைது

 

கோவை: பட்டாசு கடை உரிமம் தர லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரி கைது

கோவையில் பட்டாசு கடை உரிமம் வழங்க 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற தீயணைப்புத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர். கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதனவேல். இவர், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வேண்டி விண்ணப்பித்து உள்ளார்.

கோவை: பட்டாசு கடை உரிமம் தர லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரி கைது

இந்நிலையில், கோவை தெற்கு தீயணைப்புத்துறை அதிகாரி சசிக்குமார் என்பவர், பட்டாசு கடை உரிமம் வழங்க 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதனவேல் அளித்த புகாரின் பேரில், அவரிடம் ரசாயன கலவை கலந்த பணத்தை கொடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த பணத்தை சசிகுமார் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.