கோவை: பட்டாசு கடை உரிமம் தர லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரி கைது
Oct 24, 2020, 18:50 IST1603545610000
கோவையில் பட்டாசு கடை உரிமம் வழங்க 6 ஆயிரம் லஞ்சம் பெற்ற தீயணைப்புத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர். கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதனவேல். இவர், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வேண்டி விண்ணப்பித்து உள்ளார்.
இந்நிலையில், கோவை தெற்கு தீயணைப்புத்துறை அதிகாரி சசிக்குமார் என்பவர், பட்டாசு கடை உரிமம் வழங்க 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதனவேல் அளித்த புகாரின் பேரில், அவரிடம் ரசாயன கலவை கலந்த பணத்தை கொடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த பணத்தை சசிகுமார் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.