திருப்பத்தூர்: மேளதாளங்கள் முழங்க பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

 

திருப்பத்தூர்: மேளதாளங்கள் முழங்க பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அவசியத்தை மேளதாளங்கள் முழங்க பாடல்கள் பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் வாணியம்பாடி போலீசார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி உட்படுத்தப்பட்ட காவல்துறையினர் சார்பில் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் .

திருப்பத்தூர்: மேளதாளங்கள் முழங்க பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பொதுமக்கள் மத்தியில் தலைக்கவசத்தின் அவசியத்தை பாடல்கள் மூலம் மேளதாளங்கள் முழங்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். பின்னர் இரு சக்கர வாகனத்தில் வாணியம்பாடி முக்கிய சாலைகள் வழியாக தலைக்கவசத்தை அணிந்து காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பேரணியாக சென்றனர். இதில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி வாணியம்பாடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.