வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது – கனிமொழி ஆவேசம்

 

வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது – கனிமொழி ஆவேசம்

ஈழத்தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்திய முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக நடிகர் விஜய்சேதுபதியை கண்டுக்கிறேன் என்று அவர் மகளுக்கு டுவிட்டர் மூலமாக ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது – கனிமொழி ஆவேசம்

மிரட்டலுக்கு எதிராக பலரும் கொந்தளித்து வரும் வேளையில், கனிமொழி எம்.பி., ‘’விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட’’என்று ஆவேசப்பட்டிருக்கும் அவர்,

’’பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று வலியுறுத்தி இருக்கிறார்.