கோவை: பாடகர் எஸ்.பி.பி-க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

 

கோவை: பாடகர் எஸ்.பி.பி-க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

கோவை வ.உ.சி மைதானத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுநிகழ்ச்சி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து முதல் நிகழ்ச்சியாக மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு இசைக்கலைஞர்கள் சார்பில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: பாடகர் எஸ்.பி.பி-க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

இதனையொட்டி, எஸ்.பி.பி உருவ படத்துடன் அமைக்கப்பட்ட மேடையில், அவரது பாடல்களை பாடி, ஏராளமான இசைக்கலைஞர்கள் புகழ் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்ட அளவு பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக வெளியை கடைபிடித்து கண்டுகளித்தனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை: பாடகர் எஸ்.பி.பி-க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்