தர்மபுரி: வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தர்ணா போராட்டம்

 

தர்மபுரி: வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தர்ணா போராட்டம்

தர்மபுரி அருகே புதிதாக கட்டிய வீட்டை இடித்து தள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பன்னீர்செல்வம்(66). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடுகட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தர்மபுரி: வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தர்ணா போராட்டம்

இந்நிலையில், ஜேசிபி வாகனத்துடன் வந்த ஒரு கும்பல் வீட்டை இடித்து நொறுக்கிவிட்டு சென்றதாகவும், அதனை தடுக்க முயன்ற பன்னீர்செல்வம் குடும்பத்தினரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பன்னீர்செல்வம் குடும்பத்தினர் வீட்டின் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட போலீசார், இதுகுறித்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.