கோவை: “அறிவித்த தினத்திலேயே இ.பி.எஸ்-ன் வெற்றி உறுதியானது”

 

கோவை: “அறிவித்த தினத்திலேயே இ.பி.எஸ்-ன் வெற்றி உறுதியானது”

அமைச்சர் வேலுமணி அதிமுக தலைமையால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்திலேயே 2021-ல் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என்பது உறுதிசெய்யப்பட்டதாக, அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: “அறிவித்த தினத்திலேயே இ.பி.எஸ்-ன் வெற்றி உறுதியானது”

அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நீலாம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 106 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்து பேசிய அமைச்சர் வேலுமணி இதனை தெரிவித்தார்.

கோவை: “அறிவித்த தினத்திலேயே இ.பி.எஸ்-ன் வெற்றி உறுதியானது”

மேலும், மக்களை சந்தித்து ஓட்டு கேட்கும் தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளதாக கூறிய அவர், தலைமுறை தாண்டி முடிக்க முடியாத பிரச்சனைகளை முடித்து காட்டியவர்கள் ஜெயலலிதாவும், இ.பி.எஸ்-ம் என்று அவர் தெரிவித்தார். மேலும், கண்டிப்பாக பாண்டியாறு – புன்னம்புழா, ஆனமலை – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.