கோவை: “அறிவித்த தினத்திலேயே இ.பி.எஸ்-ன் வெற்றி உறுதியானது”
Oct 19, 2020, 11:36 IST1603087619000
அமைச்சர் வேலுமணி அதிமுக தலைமையால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்திலேயே 2021-ல் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என்பது உறுதிசெய்யப்பட்டதாக, அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நீலாம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 106 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்து பேசிய அமைச்சர் வேலுமணி இதனை தெரிவித்தார்.
மேலும், மக்களை சந்தித்து ஓட்டு கேட்கும் தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளதாக கூறிய அவர், தலைமுறை தாண்டி முடிக்க முடியாத பிரச்சனைகளை முடித்து காட்டியவர்கள் ஜெயலலிதாவும், இ.பி.எஸ்-ம் என்று அவர் தெரிவித்தார். மேலும், கண்டிப்பாக பாண்டியாறு – புன்னம்புழா, ஆனமலை – நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.