திருப்பத்தூர்: குழந்தையை கலைக்க கொடுத்த விஷத்தால் மனைவி பலி – ராணுவ வீரர் கைது

 

திருப்பத்தூர்: குழந்தையை கலைக்க கொடுத்த விஷத்தால் மனைவி பலி – ராணுவ வீரர் கைது

திருப்பத்தூர் அருகே 6 மாத கருவை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் ராணுவ வீரரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்த சிவா(63) என்பவரது மகள் சத்தியவதனம்(25). இவருக்கு ஆண்டியப்பனூரை சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன் என்பவருடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.பஞ்சாபில் பணிபுரிந்து வந்த மணிவண்ணன், சத்தியவதனாவையும் உடன் அழைத்துச்சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

திருப்பத்தூர்: குழந்தையை கலைக்க கொடுத்த விஷத்தால் மனைவி பலி – ராணுவ வீரர் கைது

இந்நிலையில், 6 மாத கர்ப்பிணியாக இருந்த சத்தியவதனாவை திடீரென சொந்த ஊருக்கு அழைத்து வந்த மணிவண்ணன், தனது தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து குழந்தையை கலைக்க விஷம் கொடுத்துள்ளார். அதனை குடித்த சத்தியவதனாவிற்கு கருக்கலைந்த நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில் சத்தியவதனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மணிவண்ணன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். புகாரின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய குரிசிலப்பட்டு போலீசார், தப்பியோடிய மணிவண்ணனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே சத்தியவதனாவை திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ள அவரது உறவினர்கள், மணிவண்ணன் மற்றும் உடந்தையாக செயல்பட்ட அவருடைய அக்கா மற்றும் அவருடைய தாயாரை கைதுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.