திருச்சி: நிலத்தகராறில் தம்பி அடித்துக்கொலை – தந்தை மகனுக்கு போலீஸ் வலை

 

திருச்சி: நிலத்தகராறில் தம்பி அடித்துக்கொலை – தந்தை மகனுக்கு போலீஸ் வலை

முசிறி அருகே சொத்து தகராறில் உடன்பிறந்த தம்பியை, மகனுடன் சேர்ந்து அண்ணன் அடித்துகொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த பச்சனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(45). இவரது உடன்பிறந்த சகோதரன் ராமசாமி(55). இவர்
வடக்கிபட்டி எனும் பகுதியில் வசித்து வருகிறார். சொத்து விவகாரம் தொடர்பாக இருவருக்குமிடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வரும் நிலையில், அவ்வப்போது கைகலப்பும் ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் நேற்றிரவு தனபாலுக்கும், ராமசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

திருச்சி: நிலத்தகராறில் தம்பி அடித்துக்கொலை – தந்தை மகனுக்கு போலீஸ் வலை

அப்போது, ராமசாமி மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் (30) ஆகியோர் தனபாலை மண்வெட்டி மற்றும் தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி டி.எஸ்.பி பிரம்மானந்தன், தனபாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தந்தை, மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி: நிலத்தகராறில் தம்பி அடித்துக்கொலை – தந்தை மகனுக்கு போலீஸ் வலை