லலிதா சகஸ்ரநாமம் படிப்பதன் பலன்கள்!

 

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதன் பலன்கள்!

அன்பே உருவானவள் அன்னை. தன் குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் மன்னித்து ஏற்கக்கூடியவள். எப்படியிருந்தாலும் அன்பை மழையாக பொழிந்து தன் குழந்தையை வாரி அணைத்து அன்பை விதைப்பவள். உலக அன்னையான லலிதாம்பிகையையும் அப்படியே. அவளது திருநாமங்களை ஒன்றாக இணைந்த லலிதா சகஸ்ரநாமத்தை சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை. இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும். உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதன் பலன்கள்!

குழந்தைவரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர். அன்றாடம் சொல்வதில் தீமைகள் விலகும். பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவங்கள் அனைத்தும் நீங்கும். அன்றாட நித்திய பூஜை முறைகளையும், அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவங்களை நீக்கும். கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும். எதிரிகள் நீங்குவர்.

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதன் பலன்கள்!


எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும். பொன், பொருள், புகழ் அனைத்தும் சேரும். லலிதா சகஸ்ரநாமத்தை தினமும் சொல்வது ஒரு தவம். அன்னைக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. இருந்தாலும், இந்த நாமத்தினைச் சொல்வதே போதும். தன்னம்பிக்கை கூடும். லலிதாம்பிகையே ஸ்ரீகாளிமாதா, துர்காதேவி, பராசக்தி, பகவதி, உலக அன்னையுமாவாள். இதில் உள்ள ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது.அன்னையின் நாமத்தை படித்து அன்னையின் அன்பை பரிபூரணமாக பெறவோம். தேவி சரணம்!

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதன் பலன்கள்!