திண்டுக்கல்: காங். எம்.பி ஜோதிமணியுடன், அதிமுவினர் வாக்குவாதம்

 

திண்டுக்கல்: காங். எம்.பி ஜோதிமணியுடன், அதிமுவினர் வாக்குவாதம்

வேடசந்தூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தை பார்வையிட சென்ற காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த ஆர்.கோம்பை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, தொகுதி எம்எல்ஏ முயற்சியின் பேரில் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது
. இந்நிலையில், தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தை இன்று பார்வையிட சென்ற கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: காங். எம்.பி ஜோதிமணியுடன், அதிமுவினர் வாக்குவாதம்

அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய அதிமுக தரப்பினர், மக்கள் நலனை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்த சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும், ஆனால் ஜோதிமணி தொழிற்பேட்டை அமையவிடாமல் தடுக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஜோதிமணி தரப்பினர், சிப்காட் அமைப்பதாக கூறிக்கொண்டு அதிமுகவினர் இயற்கை வளங்களை அழிப்பதால் தான், இதனை தடுப்பதாக தெரிவித்தனர். மேலும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மனு அளிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்: காங். எம்.பி ஜோதிமணியுடன், அதிமுவினர் வாக்குவாதம்