திருப்பத்தூர்: மாயமான கூலித் தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

 

திருப்பத்தூர்: மாயமான கூலித் தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்து மாயமான கூலித் தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், தாமலெரிமுத்தூர் அடுத்த ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அருணாச்சலம்(40). இவரது மனைவி கலையரசி. மதுப்பழக்கத்திற்கு அடிமையான அருணாச்சலம் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திருப்பத்தூர்: மாயமான கூலித் தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த அருணாச்சலம் வீட்டிலிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் நேற்று அங்குள்ள விவசாய கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்: மாயமான கூலித் தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு