அம்மா அரசை காத்து நிற்கும் பாகுபலியே! உள்ளாட்சி அமைச்சருக்கு பொள்ளாச்சியில் கட் -அவுட்

 

அம்மா அரசை காத்து நிற்கும் பாகுபலியே!  உள்ளாட்சி அமைச்சருக்கு பொள்ளாச்சியில் கட் -அவுட்

சினிமா டைட்டில்களைக்கொண்டு தலைவர்களை வர்ணித்தும், பிரபல சினிமா கேரக்டர்களின் தலையில் தங்களது தலைவரின்படத்தை மார்பிங் செய்தும் கட் அவுட் வைப்பது, பேனர் வைப்பது புதுச்சேரி மாநிலத்தில் அதிகம். அம்மாநிலத்தை ஒட்டியுள்ள கடலூரிலும் இந்த வழக்கம் அதிகம். தமிழகத்தில் மதுரையிலும் இந்த வழக்கம் அதிகமாகவே இருக்கிறது. மு.க.அழகிரி பிறந்தநாளில் இப்படிப்பட்ட பேனர், கட்-அவுட்களை மதுரை மாநகரம் முழுவதிலும் காணலாம்.

அம்மா அரசை காத்து நிற்கும் பாகுபலியே!  உள்ளாட்சி அமைச்சருக்கு பொள்ளாச்சியில் கட் -அவுட்

அண்மையில், ஆல் பாஸ் அறிவிப்பை வெளியிட்டதற்காக, ‘எங்களின் பாகுபலியே’என்று அரியர்ஸ் மாணவர்கள் கட்-அவுட், பேனர் வைத்து கலக்கினர். இப்போது, உள்ளாட்சி துறை அமைச்சருக்கு பொள்ளாட்சியில் அதே மாதிரி கட்- அவுட் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அம்மா அரசை காத்து நிற்கும் பாகுபலியே!  உள்ளாட்சி அமைச்சருக்கு பொள்ளாச்சியில் கட் -அவுட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதிகளில் அமைச்சர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருகையினை முன்னிட்டு அதிமுக கட்சியினரால், ஆனைமலை நகருக்கு வருகை தரும் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசை காத்து நிற்கும் ‘பாகுபலியே’ வருக! வருக! என்று பேனர்களும், கட் -அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.

அம்மா அரசை காத்து நிற்கும் பாகுபலியே!  உள்ளாட்சி அமைச்சருக்கு பொள்ளாச்சியில் கட் -அவுட்

இதை சிலர் போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.