மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய பால கணபதி!

 

மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய பால கணபதி!

குழந்தைகளின் வாழ்க்கை எப்பவும் கவலைகள் இன்றி சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்தது. அதுபோல, தன்னை வணங்கும் பக்தர்களின் துயரங்களை நீக்கி சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியவர் பால கணபதி.

மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய பால கணபதி!


குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவர் விநாயகப் பெருமான. அதுபோல் பிள்ளையாருக்கும் குழந்தைகளை ரொம்ப பிடிக்குமாம். குழந்தையே உருவமாக கொண்டவர் பால கணபதி. விநாயகப் பெருமானின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் முதலாவது திருவுருவம் பால கணபதி. இவ்வடிவம் யானை முகம் கொண்ட விநாயகரைக் குழந்தையாகப் பாவித்து வழிபடுவதாகும்.
சூரியனுக்கு நிகரான சிவப்பு மேனியுடன் எங்கும் ஒளியுடன் விழங்கும் ரூபத்தை கொண்டவர் பால கணபதி. யானை முகத்துடனும், தனது சிவந்த நிறமேனியின் நான்கு கரங்களிலும் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு, ஆகியவற்றைத் ஏந்தி துதிக்கையில் மோதகத்தை வைத்துக் கொண்டவர். பால கணபதியை பல்வேறு வடிவங்களில் ஓவியர்கள் காட்டுவது உண்டு. விநாயகரின் தாய், தந்தையராகக் கொள்ளப்படும் பார்வதியும், சிவனும் பால கணபதியைக் குளிப்பாட்டுவது போலவும், பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போலவும் வரையப்பட்ட படங்கள் உள்ளன. இதுத்தவிர, பால கணபதி இருப்பது போலவும், தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன.

மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய பால கணபதி!

எதிர்க்கால திட்டங்கள், வளர்ச்சி வாய்ப்புக்களை பெருக்க கூடியவராக இருக்கிறார் பால கணபதி. குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும், அறிவையும் தரக்கூடியவராக திகழ்கிறார். அத்துடன், இவர் குழந்தை வடிவத்தில் காட்சியளிப்பதால், தனது பக்தர்களின் கவலைகளைப் போக்கி, குழந்தையைப் போன்ற மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், நல்ல உடல்நலத்தையும் அருளுகிறார் பால் கணபதி மேலும், குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கணபதி பால கணபதி. மனம் போல் நல்ல வாழ்வு அமைய நல்லவைகளையே நினையுங்கள். அரசமரத்தடி விநாயகரை சதுர்த்தி நாளில் வணங்க சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் சங்கடங்கள் தீரும்.

-வித்யா ராஜா