ஆர்டர் தருகிறேன் என்று செல்போனில் அழைக்கும் வெண்ணிலா: ஆடைகளை களைத்து தொழிலதிபர்களை நிர்வாணமாக்கும் ஆண்கள்!

 

ஆர்டர் தருகிறேன் என்று செல்போனில் அழைக்கும் வெண்ணிலா: ஆடைகளை களைத்து தொழிலதிபர்களை  நிர்வாணமாக்கும் ஆண்கள்!

ஆர்டர் கொடுக்கிறேன் அட்வான்ஸ் வாங்கிச்செல்லலாம் வாங்க என்று தொழிலதிபர்களிடம் பேசி வரவழைத்து, மோசடி செய்த பெண் உட்பட அவரது ஆண் நண்பர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் விசைத்தறி நடத்தி வரும் நாட்ராயன்(56) என்பவருக்கு நேற்று முன் தினம் ஒரு பெண் செல்போனில் பேசியிருக்கிறார். தன்னை பெட்சீட் விற்கும் மொத்த விற்பனையாளர் என்று கூறிய அந்த பெண், தனக்கு மொத்தமாக பெட்சீட் வேண்டும் என்றும் அது தொடர்பாக ஆர்டர் எடுத்துக்கொண்டு அட்வான்ஸ் பணம் வாங்கிப் போகலாம் என்று வரச்சொல்லி இருக்கிறார்.

ஆர்டர் தருகிறேன் என்று செல்போனில் அழைக்கும் வெண்ணிலா: ஆடைகளை களைத்து தொழிலதிபர்களை  நிர்வாணமாக்கும் ஆண்கள்!


இதையடுத்து அந்த பெண் சொன்ன முகவரிக்கு தனது உறவினர் குமாருடன் காரில் சென்றிருக்கிறார் நாட்ராயன். அப்போது அங்கு காத்திருந்த ஆண்கள், நாட்ராயனை மடக்கி பிடித்து ஆடைகளை களைத்து போட்டு நிர்வாணம் ஆக்கி இருக்கிறார்கள். பின்னர் அந்த பெண்ணை கட்டிப்பிடிக்கச்சொல்லி போட்டோ எடுத்திருக்கிறார்கள்.

அந்தப்பெண்ணுடன் நிர்வாண நிலையில் இருக்கும் படத்தை செல்போனில் காட்டிய அந்த கும்பல், ‘’எங்களுக்கு 3 லட்சம் வேண்டும். கொடுக்காவிட்டால் இந்த படத்தை ஆன்லைனின் பரப்பிவிடுவோம்’’ என்று மிரட்டி இருக்கிறார்கள்.

நாட்ராயனும் மிரண்டு போய், நாளை வந்து தருகிறேன் என்றூ சொல்லிவிட்டு வந்துவிட்டார். ஆனால், வந்தபின்னர் குமாருடன் அவர் நடத்திய ஆலோசனையில், இவர்களின் மோசடிக்கு பலியான கடைசி ஆளாக நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து போலீசில் புகார் கொடுத்துவிட்டனர்.

ஆர்டர் தருகிறேன் என்று செல்போனில் அழைக்கும் வெண்ணிலா: ஆடைகளை களைத்து தொழிலதிபர்களை  நிர்வாணமாக்கும் ஆண்கள்!


நாட்ராயனுக்கு வந்த செல்போன் நெம்பரை வைத்து போலீசார் தேடியதில், அந்த பெண் பிடிபட்டார். அவர் பெயர் வெண்ணிலா(27) என்று தெரியவந்தது. இவர், தனது நண்பர்களான தூத்துக்குடி இசக்கிபாண்டி(30), திருவெல்வேலி இசக்கிமுத்து(27), ஜெபராஜ்(24), சின்னதுரை(29) ஆகியோருடன் சேர்ந்து இந்த மோசடி வேலையை செய்து வந்தது தெரியவந்தது.


வெண்ணிலா கொடுத்த தகவலின் அடிப்படையில் சூலூர் விடுதியில் தங்கி இருந்த அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.