அலைபாயுதே பட ஸ்டைலில் திருமணம்: ஆனால், சோகத்தில் முடிந்த க்ளைமாக்ஸ்

 

அலைபாயுதே பட ஸ்டைலில் திருமணம்: ஆனால், சோகத்தில் முடிந்த க்ளைமாக்ஸ்

கல்லூரி மாணவிக்கும் பெயிண்டருக்கும் இடையே காதல் மலர்ந்து, அது கல்யாணம் வரைக்கும் சென்றது. அலைபாயுதே படத்தில் வருவது மாதிரி வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு, அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்தனர் தம்பதிகள். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து வீட்டுச்சிறையில் வைத்ததால் அந்த இளைஞர் அப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாரும் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆந்திராவில் விஜயவாடாவை சேர்ந்த தேஜேஸ்வினி தனியார் கல்லூரியில் பி.டெ. மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் பெயிண்டர் வேலை செய்து வந்த சின்னசாமிக்கும் காதல் உண்டானது. ஆறு மாதங்கள் காதலித்த பின்னர், இரு வீட்டாருக்கும் தெரியாமல் இருவரும் கல்யாணம் செய்துகொண்டனர்.

அலைபாயுதே பட ஸ்டைலில் திருமணம்: ஆனால், சோகத்தில் முடிந்த க்ளைமாக்ஸ்

கல்யாணம் செய்துகொண்டும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்தனர். தேஜேஸ்வினிக்கு படிப்பு முடியட்டும் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால், இந்த விவகாரம் தேஜேஸ்வினி வீட்டுக்கு தெரிந்ததும், சின்னசாமியுடன் பழக விடாமல் வீட்டுச்சிறை வைத்தனர்.

இதை தெரிந்துகொண்ட சின்னசாமி, திடீரென்று தேஜேஸ்வினி வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அப்போது தேஜேஸ்வினிக்கும் சின்னசாமிக்கும் நடந்த வாக்குவாதத்தில், தேஜேஸ்வினியை சின்னசாமி கத்தியால் குத்தியிருகிறார். பின்னர் அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டுவிட்டார் சின்னசாமி.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் இருவரையும் மருத்துவமனயில் சேர்த்தனர். ஆனால், தேஜேஸ்வினி முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சின்னசாமி கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.