15வயது சிறுமியை வன்கொடுமை செய்த அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

 

15வயது சிறுமியை வன்கொடுமை செய்த அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 15 வயது சிறுமியை வன்கொடுமை செய்த அதிமுக கிளை செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

15வயது சிறுமியை வன்கொடுமை செய்த அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

மணலூர்பேட்டை அருகே 10ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி, தாய் வழி தாத்தா முனியாண்டியுடன் வசித்துவந்தார். சிறுமியின் தாத்தா முனியாண்டி, சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதையடுத்து, அச்சிறுமி கர்ப்பமானார். நிறைமாதமான சிறுமியை யாருக்கும் தெரியாமல் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்திராணி என்பவரிடம் அழைத்து சென்ற முனியாண்டி, மணம்பூண்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை செவிலிய உதவியாளர் ராஜாமணியின் உதவியுடன், சிறுமிக்கு பிரசவம் பார்த்துள்ளார். தொடர்ந்து சிறுமிக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி, இந்திராணி மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அந்த குழந்தையை புதைத்துவிட்டு, சிறுமியை முனியாண்டி வீட்டில் விட்டுள்ளார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விமல் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், முனியாண்டி மற்றும் இந்திராணியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முனியாண்டி அதிமுக கிளை செயளாலராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.