மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை – 15 வயது மகன் வெறிச்செயல்!

 

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை – 15 வயது மகன் வெறிச்செயல்!

திருப்பூர்

திருப்பூரில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை, 15 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஶ்ரீராம் (47). இவர் தனியார் பனியன் கம்பெனியில் கேண்டீன் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 15 வயதில் மகன் உள்ளனர். இந்த நிலையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான ஶ்ரீராம், அடிக்கடி மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை – 15 வயது மகன் வெறிச்செயல்!

இந்த நிலையில், நேற்றிவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஶ்ரீராம், மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது 15 வயது மகன் வீட்டில் இருந்த கத்தியால் ஶ்ரீராமை சரமாரியாக குத்தினார். இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலின் பேரில், அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.