அழகா இருந்த 16 வயது பொண்ணு -அசிங்கமாக பேசிய 16 வயதான பையன் -கடைசியில் நடந்த சோகம்

 

அழகா இருந்த 16 வயது பொண்ணு -அசிங்கமாக பேசிய 16 வயதான பையன் -கடைசியில் நடந்த சோகம்


அடிக்கடி கிண்டல் செய்த வாலிபரால் மனமுடைந்த ஒரு டீனேஜ் பெண் தீக்குளித்து உயிருக்கு போராடி வருகிறார்.

அழகா இருந்த 16 வயது பொண்ணு -அசிங்கமாக பேசிய 16 வயதான பையன் -கடைசியில் நடந்த சோகம்


உத்தரபிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 16 வயதான பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார் .இந்நிலையில் அந்த பெண் பள்ளிக்கு போகும் போதும், வரும் போதும் அந்த ஊரை சேர்ந்த 16 வயதான டீனேஜ் பையன் அந்த பெண்ணை கிண்டல் செய்வதும் ,பின்னால் சென்று பாட்டு படுவதும் என்று தினமும் வம்பு செய்து வந்துள்ளார் .இதனால் அந்த பெண் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் .அதனால் அவர் பள்ளிக்கு போவதை கூட தவிர்த்தார் .
இதனால் அந்த பெண்னின் பெற்றோர், அந்த பெண்ணிடம் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்ட போது அந்த டீனேஜ் வாலிபனின் தொல்லைகள் பற்றி கூறினார் .இதனால் பொங்கியெழுந்த அந்த பெண்னின் பெற்றோர், கடந்த திங்கள் கிழமை அந்த வாலிபரை அடித்துள்ளார்கள் .பின்னர் அந்த வாலிபன் மீது போலீசில் புகாரும் கொடுத்தனர் .அதன் பிறகு போலிசார் அந்த சிறுவனை கூப்பிட்டு எச்சரித்தார்கள் .ஆனால் அதற்கு பிறகு அந்த வாலிபரின் சேஷ்டைகள் அதிகமானது .அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணை பற்றி அவதூறான கருத்துக்களை எல்லாம் கூறினார் .அவரை பற்றி மோசமாக விமர்சித்தார் .இதனால் மனமுடைந்த அந்த பெண் வீட்டிற்கு வந்து தன்னுடைய உடலில் மண்ணைன்னை ஊற்றி தீக்குளித்தார் .இப்போது அந்த சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் கான்பூர் ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கும் போராடி வருகிறார் ,இதனால் போலிஸார் அப்பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அழகா இருந்த 16 வயது பொண்ணு -அசிங்கமாக பேசிய 16 வயதான பையன் -கடைசியில் நடந்த சோகம்