15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தந்தை மற்றும் காதலன் கைது!!

 

15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :  தந்தை மற்றும் காதலன் கைது!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் தந்தை மற்றும் சிறுமியின் காதலன் ஆகியோரை வைத்து சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :  தந்தை மற்றும் காதலன் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மாத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த 15 வயது சிறுமி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :  தந்தை மற்றும் காதலன் கைது!!

இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 39 வயதான சிறுமியின் தந்தை முனியசாமி, சிறுமியை காதலித்து வந்த ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 19வயதான் அறிவுமதி ஆகிய இருவரும் சிறுமியிடம் அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.