“ஏன்டா என் அக்காவை சைட் அடிக்கிறே” -கோபப்பட்ட தம்பியால் வாலிபரின் பரிதாப நிலை .

 

“ஏன்டா என் அக்காவை சைட் அடிக்கிறே” -கோபப்பட்ட தம்பியால் வாலிபரின் பரிதாப நிலை .

தன்னுடைய சகோதரியை சைட் அடித்த வாலிபரை, அவரின் தம்பியும் சில சிறுவர்களும் சேர்ந்து அடித்து காயமுற செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

“ஏன்டா என் அக்காவை சைட் அடிக்கிறே” -கோபப்பட்ட தம்பியால் வாலிபரின் பரிதாப நிலை .

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் நகரில் தரங்கன் நகரில் வசிக்கும் பண்டிட் என்ற 20 வயது இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை அடிக்கடி சைட் அடித்து வந்துள்ளார் .அந்த பெண் வெளியே போகும்போதும், வரும் போதும் அந்த வாலிபர் அந்த பெண்ணை கிண்டல் செய்வதும் ,ஜாடை மாடையாக பேசுவதுமாக இருந்துள்ளார் .இந்த விஷயம் அந்த பெண்ணின் 15 வயதான சகோதரருக்கு தெரிய வந்துள்ளது .

அதனால் அந்த 15 வயதான சிறுவன் தன்னுடைய நண்பர்கள் இருவரை துணைக்கு சேர்த்து கொண்டு அந்த வாலிபருக்கு பாடம் புகட்ட நினைத்தார் .அதன் காரணமாக அவரும் அவரின் நண்பர்களும் கடந்த வெள்ளிக்கிழமையன்று பண்டிட்டின் வீட்டிற்க்கு  வெளிய காத்திருந்தார்கள் .பிறகு சிறிது நேரம் கழித்து பண்டிட் வீட்டை விட்டு வெளியே வந்தார் .அப்போது வெளியே காத்திருந்த மூன்று சிறுவர்களும் அந்த பண்டிட்டை கடுமையாக தாக்கினார்கள் .அதன் காரணமாக அந்த பண்டிட் பலத்த காயமுற்றார் .பின்னர்  அந்த  சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள் .அதன் பிறகு அந்த பண்டிட்டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அவரின் தாயார் அவரை அருகிலுள்ள மறுத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .இதற்கிடையே அந்த பண்டிட்டை தாக்கி காயமுற செய்த சிறுவர்களை போலீசார் கைது  செய்தார்கள் .அதைத் தொடர்ந்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த சிறார்களை  விசாரித்தனர்.பின்னர் அவர்களை  சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளார்கள் .

“ஏன்டா என் அக்காவை சைட் அடிக்கிறே” -கோபப்பட்ட தம்பியால் வாலிபரின் பரிதாப நிலை .