“பையன் பார்க்க அழகா இருக்கான்! தூக்குங்கடா அவனை” -சிவப்பா இருந்த சிறுவனை சிதைத்த கொடூரர்கள் .

 

“பையன் பார்க்க அழகா இருக்கான்! தூக்குங்கடா அவனை” -சிவப்பா இருந்த சிறுவனை சிதைத்த கொடூரர்கள் .


பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் 15 வயதான சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டான்.

“பையன் பார்க்க அழகா இருக்கான்! தூக்குங்கடா அவனை” -சிவப்பா இருந்த சிறுவனை சிதைத்த கொடூரர்கள் .


பாகிஸ்தானில் நாளுக்கு நாள் சிறுவர் சிறுமி பாலியல் கொடுமை அதிகமாகி வருகிறது .கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் நாட்டில் 2020 முதல் பாதி வரை 1,489 குழந்தைகள்,பாலியல் கொடுமைக்கு ஆளானதாக சாஹில் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது .அதன் படி ஒரு நாளைக்கு எட்டு பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 785 சிறுமிகளும் 704 சிறுவர்களும் அடங்குவதாக அது தெரிவித்துள்ளது.இதில் பாதிக்கப்பட்ட 98 பேர் ஒன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அறிக்கை கூறியுள்ளது.மேலும் ஆறு முதல் 10 வயது வரை 331 பேரும்,11 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களில் 490 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது .

அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் பாகிஸ்தானின் லாகூரின் ரைவிந்தில் ஒரு 15 வயதான சிறுவன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியிருந்தான் .அவனோடு அவன் வயதுடைய சில சிறுவர்களும் விளையாடி வந்தனர் .இந்நிலையில் திடீரென அந்த 15 வயதான சிறுவன் தன்னுடைய நண்பனை ப்ளாக் செய்து விட்டான் .இதனால் கோபமுற்ற அந்த நண்பன் மேலும் சில தோழர்களை அழைத்துக்கொண்டு அந்த 15 வயதான சிறுவனை ஜனவரி 13 ம் தேதி கடத்தி சென்றார்கள் .அவர்கள் அந்த சிறுவனை நங்கனா சாஹிப்பிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் அந்த சிறுவனை முதலில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் கொலை செய்தார்கள் . பின்னர் அவரது உடலை ஷேகுபுராவில் வீசிவிட்டார்கள் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .விரைந்து வந்த போலீசார் சந்தேக நபர்களின் டி.என்.ஏ மாதிரிகளை எடுத்து தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளார்கள் .இந்த 15 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர் .

“பையன் பார்க்க அழகா இருக்கான்! தூக்குங்கடா அவனை” -சிவப்பா இருந்த சிறுவனை சிதைத்த கொடூரர்கள் .