“ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக, 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்” – எஸ்.பி. தங்கதுரை தகவல்

 

“ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக, 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்” – எஸ்.பி. தங்கதுரை தகவல்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ரூ.62 லட்சம் அபராதம் வசூலித்து உள்ளதாகவும் மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றும் வாகனங்கள் மற்றும் இ-பதிவு இன்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்றும், இதுதவிர தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

தற்போதுவரை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய எஸ்.பி தங்கதுரை, விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ரூ.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

“ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக, 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்” – எஸ்.பி. தங்கதுரை தகவல்

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மருத்துவ காரணங்களுக்காக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாக கூறிய எஸ்.பி. தங்கதுரை, இ-பதிவு பெற்றால் மட்டுமே அவர்களது வாகனம் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதாகவும் இல்லாவிட்டால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர் என்றும் கூறினார். அத்துடன், மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, ஊரடங்கின் 13-வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வந்த 330 பேருக்கும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 22 பேருக்கும் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், ஊரடங்கை மீறி சுற்றியதாக 974 வழக்குகள் பதிவுசெய்த போலீசார், 912 இருசக்கர வாகனங்களையும், 23 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன், நேற்று ஒரே நாளில் ரூ.4.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது.