நாமக்கல் அருகே வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்: அச்சத்தில் மக்கள்!

 

நாமக்கல் அருகே வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்: அச்சத்தில் மக்கள்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சுற்றித்ததிரியும் வெறிநாய் கடித்ததில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரத்தில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிகிறது. சாலையில் செல்லும் ஒரு மக்களை விடாமல் எல்லாரையும் கடிக்கும் அந்த நாய் பற்றி அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் இருக்கும் பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களை அந்த வெறிநாய் கடித்துக் குதறியிருக்கிறது.

நாமக்கல் அருகே வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்: அச்சத்தில் மக்கள்!

அதனால் அவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்த நிலையில் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. வெறிநாய்க் கடிக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் என்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் மேல் சிகிச்சைக்ககாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்களை தினந்தோறும் அச்சுறுத்தும் அந்த நாயை பிடித்துச் செல்ல வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.