பண்ருட்டியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் 15 லட்சம் நகை,பணம் கொள்ளை
பண்ருட்டியில் முன்னாள் வட்டாட்சியர் இல்லத்தில் 15 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஓய்வுபெற்ற தாசில்தார் மங்களம் அவர்கள் எல்.என். புரம் அருகில் உள்ள டி.ஆர்.வி.நகரில் வசித்து வருகின்றனர். சில நாட்களாக வெளியூர் சென்று வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் . உடனடியாக பண்ருட்டி காவல்நிலையத்தில் முன்னாள் வட்டாட்சியர் மங்களம் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 31 பவுன் நகைகள் 2 கிலோ வெள்ளி 45 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது .
இதை தொடர்ந்து காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்த தடயங்களை சேகரிக்கப்பட்டு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருக்கின்றனர் .
பண்ருட்டியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் 15 லட்சம் நகை,பணம் கொள்ளை#cuddalore #ttn pic.twitter.com/7ExvZnK5XF
— Top Tamil News (@toptamilnews) September 17, 2020